பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் 85.31 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் 77.84 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனையாகிறது. அதன் படி பெட்ரோல் லிட்டர் 85.31 ரூபாயாகவும், டீசல் விலை 77.84 ரூபாயாகவும் உள்ளது. இந்த விலை நிலவரம் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.