ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால் அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய காலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து சவரன் ரூ.38,000க்கும் ஒரு கிராம் ரூ.14 உயர்ந்து ரூ.4,750க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி நேற்று தங்கத்தின் விலை 38 ஆயிரத்தை தொட்டநிலையில் இன்று அதிரடி சரிவை கண்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 என குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.55 குறைந்து ரூ.4,695க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதையடுத்து சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.58,000க்கு விற்பனையாகிறது.