தொடர் மழையின் காரணமாக உயரும் காய்கறிகளின் விலை

சென்னை: மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. எனவே இதன் காரணமாக காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வு ...தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் காய்கறிகளின் தேவை அதிகரித்து உள்ளது.

இச்சூழ்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக வெளி மாநிலங்களில் தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துவுள்ளது. இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை ரூ.30-ஐ கடந்து உள்ளது. அதே போன்று அசைவ உணவுகளுக்கு அதிகம் பயன்படுத்தக்கூடிய இஞ்சியின் விலை ரு.200 – ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது.


காய்கறிகளின் விலை பட்டியல் :

நெல்லிக்காய் ரூ.102
பீட்ரூட் ரூ.40
கத்தரிக்காய் ரூ.50
முட்டைக்கோஸ் – ரூ.15
கேரட் – ரூ.25
காலிபிளவர் – ரூ.20
முருங்கைக்காய் ரூ.50
பூண்டு ரூ.180
இஞ்சி – ரூ. 240
கருணைக்கிழங்கு ரூ.30
வெண்டைக்காய் ரூ.30
பெரிய வெங்காயம் ரூ.55
சின்ன வெங்காயம் ரூ. 110

இதனை அடுத்து பீர்க்கங்காய் ரூ. 50
உருளைக்கிழங்கு ரூ.33
முள்ளங்கி ரூ. 30
தக்காளி ரூ.35
பூசணி ரூ.25