நகை வாங்க சரியான நேரம்

சென்னை: இந்தியாவில் கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் உயர்ந்த தங்கம் விலை தற்போது வரை குறையவில்லை. நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த தங்கம் விலையானது பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தினந்தோறும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நிர்ணயம் கொண்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 39,368க்கு விற்பனை செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்துள்ளது.

இதனை அடுத்து நேற்று ரூ. 32 குறைந்திருந்த நிலையில் இன்று ரூ.248 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39,328க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.31 குறைந்து ரூ.4,916க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.10 காசுகள் குறைந்து ரூ.68 க்கு விற்பனையாகி வருகிறது நேற்றை விட இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.