நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா நேரில் சந்தித்ததாக தகவல்

சென்னை: நேரில் சந்தித்தனாரா? நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு நேரில் சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என்ற மகன்கள் உள்ளனர். சமீபத்தில் தனது இளைய மகன் லிங்காவின் 12 வது பிறந்த நாளை கொண்டாடி அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார் ஐஷ்வர்யா.

ஆனால் இந்த ஜோடி இந்த வருடம் ஜனவரி மாதம் இருவரும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது ரஜினி மற்றும் தனுஷ ரசிகர்களுக்கு அதிர்ச்சியான விஷயமாக அமைந்தது. இந்த ஜோடி பிரிய போவதில்லை, இருவரும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருந்தார் தம்பதிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்த போதும் அது கைகூடவில்லை.

இந்நிலையில் இருவரும் தங்கள் படங்களில் பிசியாக உள்ளனர். ஒரு பக்கம் 'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்', 'வாத்தி' என படங்களில் பிசியாக இருக்கிறார் தனுஷ். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா மீண்டும் இயக்குநராக தன்னுடைய பணிக்கு திரும்பியுள்ளார். 'பயணி' என்ற மியூசிக்கல் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். இதற்குப் பிறகு பாலிவுட்டில் இயக்குநர் மற்றும் ராகவா லாரன்ஸ் திரைப்படம் என அடுத்தடுத்து இயக்கத்தில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் முன்பு தனுஷ்- ஐஷ்வர்யா வசித்து வந்ததாகவும் இங்கு தான் அவர்கள் மீண்டும் சந்தித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் முடிவை மாற்றி இருக்கலாம் அல்லது குழந்தைகள் எதிர்காலம் தொடர்பான சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என்கின்றன சினிமா வட்டாரங்கள். ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பு எதுவும் உறுதிப்படுத்தவில்லை.