சர்தார் படம் குறித்து தெரிவித்த நடிகர் கார்த்தி

சென்னை: சர்தார் படத்தின் டிரெய்லர் வெளியானது... நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படமான ‘சர்தார்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சர்தார்’. இதில் கார்த்தி இரண்டு வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் ரெஜிஷா விஜயன் மற்றும் ராசி கண்ணா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.


இவர்களுடன் பாலிவுட் நடிகர் ஷங்கி பாண்டே, முனீஸ் காந்த், லைலா, ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் சி. வில்லியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். உளவு துறை திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் லக்ஷ்மன் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

தீபாவளி விருந்தாக அக்டோபர் 21ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சர்தார் வெளியாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.


விழாவில் பங்கு பற்றி பேசிய நடிகர் கார்த்தி, ” சர்தார் திரைப்படம் இந்திய பாணியிலான உளவு துறை சம்பந்தப்பட்ட திரில்லர் ஜேனரிலான திரைப்படம். இதில் ஜேம்ஸ் பொண்ட் படத்தில் இடம்பெறும் நீச்சலுடை காட்சிகள் இதில் இடம்பெறவில்லை.

அதனால் குடும்பத்துடன் கண்டு ரசிக்க வேண்டிய படைப்பாக உருவாகி இருக்கிறது என்றார்.