கௌதம் மேனன் இயக்கத்தில் முழுநேர வில்லனாக நடிகர் கிருஷ்ணா!

இயக்குனர் கௌதம் மேனன் கொரோனா விடுமுறையிலும் பிசியாக உள்ளார். அவரது 'கார்த்திக் டயல் செய்த எண்' மற்றும் 'ஒரு சான்ஸ் கொடு' ஆகிய குறும்படங்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பபை பெற்றது. இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படத்துக்கான பணிகளில் தீவிரமாக கௌதம் மேனன் உள்ளார்.

அவர் தற்போது 'ஜோஸ்வா இமைபோல் காக்க' என்ற திரைப்படத்தையும் 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.அது போக வெப்தொடர்களையும் இயக்கவும் திட்டமிட்டு வருகிறார். அதோடு கூட 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஜோஸ்வா இமைபோல் காக்க' என்ற திரைப்படத்தில் வருண் மற்றும் ராஹே ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக பிரபல தமிழ் பட ஹீரோ கிருஷ்ணா நடிக்க உள்ளதாக கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.

கழுகு, யாமிருக்க பயமே உள்பட பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் மாரி 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்த கிருஷ்ணா தற்போது முழுநேர வில்லனாக 'ஜோஷ்வா இமைபோல் காக்க' படத்தில் நடிக்க உள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் இசையமைக்க உள்ளார். எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.