காதல் மற்றும் திருமணம் குறித்து மனம் திறந்த நடிகர் ராணா!

உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகர் ராணாவுக்கும் மீஹிகா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது . இந்த நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ராணா, தனது காதல் குறித்தும் திருமணம் குறித்தும் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-

எனக்கு சின்ன வயதில் இருந்தே மிஹீகாவை தெரியும். எனது சகோதரியும் அவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்கு செல்வார்கள். ஆனால் அவர்கள் திடீரென ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று விட்டதால் அதன் பின்னர் அவருடனான தொடர்பு விட்டு போய் விட்டது.

இந்த நிலையில் ஊரடங்கின் போது மீண்டும் நாங்கள் பேச ஆரம்பித்தோம். அப்போது தான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இனிமேலும் தாமதிக்க வேண்டாம் என்று உடனே இரு வீட்டாரிடம் சொல்லி திருமணம் செய்து கொண்டோம்.

மேலும் எங்களது திருமணம் மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சினிமா ஸ்டூடியோவில் தான் எங்கள் திருமணம் நடந்தது. அந்த நேரத்தில் ஊரடங்கு காரணமாக எந்த படப்பிடிப்பும் நடக்காததால் ஸ்டூடியோவில் திருமணத்தை வைக்க முடிவு செய்தோம்.

கொரோனா வைரஸ் அந்த நேரத்தில் அதிகமாக பரவியதால் வீட்டுக்கு அருகிலேயே உள்ள ராமநாடு ஸ்டுடியோவை திருமணத்திற்கு தேர்வு செய்தோம் என்றும், அந்த ஸ்டுடியோவுக்கு எங்கள் வீட்டில் இருந்து 5 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்றும், அதனால் திருமண நாளில் ஸ்டூடியோவுக்கு கல்யாண மாப்பிள்ளை கோலத்தில் நடந்தே சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகை ராணாவின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.