சென்னை: வருது... விரைவில் டைட்டில் வருது... ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
சூர்யா 42 படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் 3டியில் வரலாற்றுப் படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சூர்யா 42 படம் குறித்த அப்டேட் ஒன்றை சூர்யா-42 படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சூர்யா-42 படத்தின் தலைப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என்றும், டீசர் மே மாதம் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.