இறுகப்பற்று படக்குழுவை பாராட்டி தள்ளிய நடிகர் சூர்யா

சென்னை: பாராட்டினார் நடிகர் சூர்யா... தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா இறுகப்பற்று படக்குழுவை பாராட்டி தள்ளி உள்ளார்.

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் இறுகப்பற்று. இத்திரைப்படத்தினை எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத் மற்றும் தங்கபிரபாகரன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் போடென்டியல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளனர்.

இறுகப்பற்று நேற்று திரையரங்குகளில் வெளியானது. காதல், திருமண வாழ்க்கை அதற்கு பிறகான முரண்பாடு என்று வாழ்க்கை எதார்த்தத்தை காட்சிப்படுத்தி இருக்கிறது. இப்படி கணவன் மனைவிக்கு இடையே வரும் பிரச்னைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை இத்திரைப்படம் விரிவாக எடுத்துரைத்துள்ளது.

மேலும் படம் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதால் படத்திற்கான வசூலும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதற்கிடையில் தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரம் நடிகர் சூர்யா இறுகப்பற்று பட குழுவை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் சூர்யா கூறியிருப்பதாவது; இறுகப்பற்று படத்திற்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் அன்பை பார்க்கும்போது, மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பு நிறுவனம் போடென்டியல் ஸ்டுடியோஸ் மீண்டும் ஒரு நல்ல கதை மீது நம்பிக்கை வைத்து படம் எடுத்துள்ளனர். இயக்குநர் யுவராஜ் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.