மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகை ரித்திகா சிங்

புதுடில்லி: இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் அசிங்கமாக இருக்கிறது. அவர்கள் மனநிலையை நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒட்டுமொத்த உலகத்திற்கு முன்பாக அவர்களுக்கு சுயமரியாதையும் மறுக்கப்பட்டுள்ளது என்று மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நடிகை ரித்திகா சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு புகாா் மீது கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த 28ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது, நாடாளுமன்ற திறப்பு விழாவுக்காக குவிக்கப்பட்டிருந்த காவலர்கள், வீரர், வீராங்கனைகளை குண்டுக்கட்டாக கைது செய்து அழைத்துச்சென்றனர்.

தற்போது சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசவுள்ளதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்தனர்.