ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள நடிகை சாய் பல்லவி: என்னம்மா வேண்டுதல்!!!

சென்னை: நடிகை சாய் பல்லவி திடீரென ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளார்.

நடிகைகளில் பலரும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கு கடலில் குளிக்கும் புகைப்படங்களையும், இடங்களை சுற்றிப்பார்க்கும் படங்களையும் விதம் விதமாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவது வழக்கம்.

இதில் நடிகை சாய் பல்லவி திடீரென ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளார். காஷ்மீரில் உள்ள பல கோவில்களுக்கு சென்று வழிபட்டார். அங்குள்ள அமர்நாத் கோயிலுக்கும் சென்று பானிலிங்கத்தை வழிபட்டார். அப்போது சாய் பல்லவியை பார்த்த கூட்டத்தினர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

சாய்பல்லவியின் ஆன்மீக பயண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் சாய்பல்லவியின் கார்க்கி, தெலுங்கில் விராட பருவம் ஆகிய படங்கள் வந்தன. தற்போது சிவகார்த்திகேயனின் 21-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்டு செய்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.