விபத்துக்கு பின்னர் மீண்டும் புதிய கார் வாங்கிய நடிகை யாஷிகா

சென்னை: விபத்துக்கு பிறகு மீண்டும் புது காரை பல லட்சங்கள் கொடுத்து வாங்கியுள்ளார் நடிகை யாஷிகா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரிய கார் விபத்தில் சிக்கினார். அவர் வேகமாக கார் ஓட்டி சென்று மோதியதில் உடன் பயணித்த தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யாஷிகாவுக்கும் பலத்த காயம் மற்றும் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்ட நிலையில் அதற்காக மாதக்கணக்கில் சிகிச்சை பெற்று தற்போது தான் குணமடைந்து இருக்கிறார். பல மாதங்கள் அவர் படுத்த படுக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் ஒரு புது கார் வாங்கி இருக்கிறார். புத்தாண்டு ஸ்பெஷலாக அவர் இதை வாங்கி இருக்கிறார். அவர் வாங்கிய Volkswagen Virtus காரின் டாப் எண்டு மாடல் விலை சுமார் ரூ. 22.5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.