பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உள்ள வணங்கான் படம் பற்றிய அப்டேட்

சென்னை: சூர்யா நடித்து கைவிடப்பட்ட கதையில் சில மாற்றங்களை செய்த இயக்குனர் பாலா, வணங்கான் என்ற பெயரில் படத்தை அருண் விஜய் தொடர இருக்கிறார். இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடக்க உள்ளதாம்.

சூர்யா தயாரித்து தயாரித்து பாலா இயக்கத்தில் 40 நாட்கள் படமாக்கப்பட்ட வணங்கான்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இயக்குனர் பாலா தரப்பில் இருந்து விளக்க கடிதம் வெளியானது.

அதன்பிறகு கதையில் சில மாற்றங்களை செய்த இயக்குனர் பாலா, வணங்கான் என்ற பெயரில் படத்தை அருண் விஜய் தொடர இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்த நாயகி கீர்த்தி ஷெட்டி தற்போது மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் விலகி தற்போது புதிய ஒளிப்பதிவாளராக ஆர்.பி.குருதேவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியிலும், அடுத்த கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையிலும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.