2ம் திருமணம் குறித்து கனவில் கூட நினைக்க முடியாது... முற்றுப்புள்ளி வைத்த மீனா

சென்னை: என்னுடைய கணவர் இறந்த துக்கத்திலிருந்து என்னால் மீண்டும் வர முடியவில்லை. இரண்டாம் திருமணம் குறித்து தற்போது கனவில் கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்று தனது 2ம் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை மீனா.

தமிழ் சினிமாவில் 90’ல் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தற்போது வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் தனியாக இருக்கும் மீனாவிற்கு துணையாக இருக்க இரண்டாம் திருமணம் செய்து வைக்க குடம்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். ஆரம்பத்தில் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த மீனாவிடம், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், தோழிகள் வற்புறுத்தி வந்துள்ளனர். கணவர் இறப்பதற்கு முன் அவரது அப்பாவை இழந்தும் கணவரை இழந்தும் இருந்துள்ளார் மீனா.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்ததால் தன் மகளின் பாதுக்காப்பிற்கும் எதிர்காலத்திற்கு உனக்கு ஆண் துணை வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். வேறு வழியின்றி மீனா தன் மகளுக்காக தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளாராம்.

நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், அவருடைய இரண்டாம் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் தீயாக பரவியது. இந்நிலையில் நடிகை மீனா தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்த வதந்திகளுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, என்னுடைய கணவர் இறந்த துக்கத்திலிருந்து என்னால் மீண்டும் வர முடியவில்லை. இரண்டாம் திருமணம் குறித்து தற்போது கனவில் கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. அதற்குள் இதைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் தற்போது கதைகளை தேர்வு செய்வதில் மட்டும்தான் முழு கவனமும் செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் என்னை பற்றி பரவும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் வதந்தி என்றும் கூறியுள்ளார்.