ரூ.100 கோடி மதிப்பில் படத்தை இயக்க உள்ள இயக்குனர் சேரன்?

சென்னை: 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படத்தை உருவாக்க உள்ளார் இயக்குனர் சேரன் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து எளிமையான இயல்பான ஃபீல்குட் படங்களை இயக்கி வந்தவர் தான் இயக்குனர் சேரன். இவர் இயக்கிய ஆட்டோகிராப் , தவமாய் தவம் இருந்து போன்ற படங்களுக்கு இப்போதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

தற்போது சேரன் கன்னட நடிகர் சுதீப் உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் மூலம் சேரன் கமர்ஷியல் இயக்குநர் அவதாரத்தை எடுக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக கூறப்படுகிறது.