எந்திரன் படத்தின் புகைப்படம் குறித்த உண்மையை வெளியிட்ட ஒளிப்பதிவாளர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவான 'எந்திரன்' திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரஜினியின் திரையுலக வாழ்வில் இந்த படத்தின் வெற்றி ஒரு மைல்கல் என்றே கூறலாம். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கும் நாளன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் ரஜினிகாந்த் கையில் ரோஜா வைத்தபடி எந்திரன் வேடத்தில் இருக்கும் ஸ்டில் ஒன்று வெளியானது.

இந்த நிலையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் ஒரிஜினலாக ரஜினியை வைத்து எடுத்த இதே புகைப்படம் ஒன்றை தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் அவர்கள் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து ஒளிப்பதிவாளர் கூறுகையில், கடந்த 2008 ஆம் ஆண்டு ’எந்திரன்’ படப்பிடிப்பு தொடங்கும் போது இந்த புகைப்படத்தை எடுத்தேன். இந்த புகைப்படம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் புகைப்படம் இல்லை. உண்மையாகவே ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல் முழுவதும் சில்வர் கலர் பெயின்ட் அடித்துக்கொண்டு சில்வர் கலர் தொப்பி மற்றும் சில்வர் கலர் கண்ணாடி அணிந்து கொண்டு கையில் ரோஜாவுடன் இருக்கும் புகைப்படம் இது.

மேலும் தலைவர் அவர்கள் இந்த புகைப்படத்தின் போட்டோஷூட்டின்போது இதற்காக அதிகபட்ச ரிஸ்க் எடுத்துள்ளார். இது யூனிட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.