கானா பாடல்கள் பாடி கோவை குணாவுக்கு நண்பர்கள் அஞ்சலி

கோவை: கோவை குணாவின் நண்பர்கள் அவரைப் பற்றிய கானா பாடல்களைப் பாடி இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரைப் பற்றி பாடிய கானா பாடல்கள் அங்கிருந்தவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.

பலகுரல் கலைஞர் கோவை குணா உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் காலமானார், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு பல பிரபலங்கள், நகைச்சுவை நடிகர்கள், குரல் கலைஞர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின் அவரது உடல் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், கோவை குணாவின் நண்பர்கள் அவரைப் பற்றிய கானா பாடல்களைப் பாடி இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரைப் பற்றி பாடிய கானா பாடல்கள் அங்கிருந்தவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.