பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக நுழைகிறார் ஜி.பி.முத்து

சென்னை: நாளை தொடங்கும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் முதல் ஆளாக வீட்டிற்குள் செல்வது ஜி.பி.முத்து என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாளை மாலை பிரம்மாண்டமாக பிக் பாஸ் 6 துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளிவந்தது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்த நிகழ்ச்சி நாளை தொடங்குகிறது.

இதில் மைனா நந்தினி, ஷிவின் கணேசன், ராபர்ட், ஜி.பி. முத்து, அமுதவாணன் உள்ளிட்ட 21 நபர்களின் லிஸ்ட் வெளிவந்தது.
இந்நிலையில், நாள் துவங்கவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் முதல் ஆளாக ஜி.பி. முத்து வீட்டிற்கு செல்ல உள்ளாராம்.


ஜி.பி. முத்து போட்டியில் கலந்துகொள்கிறார் என்று பலருக்கும் தெரிந்திருந்தாலும், முதல் ஆளாக அவர் செல்லுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது.