காதலித்தேன்... வேதனைப்பட்டேன்; நடிகை மீரா நந்தன் ஒப்புதல்

காதலில் விழுந்து வேதனையடைந்தேன் என்று நடிகை மீராநந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழில், வால்மீகி, அய்யனார், சண்டமாருதம், சூரியநகரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை மீரா நந்தன். இவர் சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் கடைசியாக, கடந்த 2017 ம் ஆண்டு வெளியான கோல்ட் காய்ன் என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்த அவர், அதற்கு பிறகு நடிக்கவில்லை. பின்னர் துபாயில் ஒளிபரப்பாகும் மலையாள எஃப் எம் ஒன்றில், ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் காதலில் விழுந்தேன், பின் வேதனை அடைந்தேன். பிறகு என்னை நானே நேசிக்க கற்றுக் கொண்டேன் என்று நடிகை மீரா நந்தன் கூறியிருக்கிறார் . சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய அவர், எனது 20 வயதை முழு மனதுடன் திரும்பிப் பார்க்கிறேன்.

வாழ்க்கையில் முதல் அனுபவங்களை பலவற்றை அனுபவித்தேன். என் 30 இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.