நாட்டு நாட்டு பாடல் போட்டால்தான் சாப்பிடுவேன்... கரீனாகபூரின் குழந்தை அடம்

மும்பை: நடிகை கரீனாகபூரின் இரண்டு வயதுக் குழந்தை ஜஹாங்கிர் நாட்டு நாட்டு பாடலை கேட்டுதான் சாப்பாடே சாப்பிடுகிறானாம். இத்தகவலை நடிகை கரீனா கபூரே தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கார் வாங்கினாலும் வாங்கியது இங்கே அதைப் பற்றிப் பேசாத ஆட்கள் இல்லை. சமீபத்தில் நடிகை கரீனாகபூர் தனது மகனும் இரண்டு வயதுக் குழந்தையுமான ஜஹாங்கிர் சுருக்கமாகச் செல்லமாக ‘ஜெ’ கூட இப்போதெல்லாம் இரவு டின்னர் சாப்பிட வேண்டுமென்றால் உடனே ‘நாட்டு நாட்டு’ பாடலைத் தான் கேட்க வேண்டுமென்கிறான்.

அந்தப் பாடலில் இந்தி டப்பிங் வெர்சனை போட்டால் அதை அவன் ஏற்றுக் கொள்வதில்லை. அவனுக்கு ஒரிஜினல் தெலுங்கு நாட்டு நாட்டு தான் வேண்டுமென்று அடம்பிடிக்கிறான். அதுவரை சாப்பிட வாயைத் திறப்பதே இல்லை.

இந்தியின் நாச்சோ... நாச்சோ அவனுக்கு ஏனோ பிடிப்பதில்லை. ஒரு இரண்டு வயதுக் குழந்தை கூட தன் விருப்பத்தை வலியுறுத்தும் அளவுக்கு அந்தப் பாடலின் இசையும், பாடல் வரிகளும், அதன் நடன அமைப்பும் பலரையும் ஆகர்ஷித்துக் கொள்ளும் அளவுக்கு அதில் ஏதோ மாயஜாலத்தை ஒழித்து வைத்துக் கொண்டிருக்கிறது.

நானும் ஒரு சினிமாக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால் அந்தப் பாடலுக்கு கிடைத்த ஆஸ்கார் விருதை எண்ணி அக்குடும்பத்தில் ஒருத்தி எனும் வகையில் நானும் மிகுந்த பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

நடிகை கரீனா கபூர்… பாலிவுட்டின் புகழ் பெற்ற ராஜ்கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மணந்துகொண்டது பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகானை. இவர் பட்டோடி நவாப் அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களுக்கு முன்னதாக தைமூர் அலிகான் என்றொரு மகன் இருக்கிறான். இரண்டாவது வாரிசு தான் இந்த இரண்டரை வயதுக் குழந்தையான நாட்டு நாட்டு ஃபேன் ஜெ. அப்போ இந்தக் குழந்தை ஒரு ராயல் ஸ்டார் குழந்தை தானே