இது நிஜமா... லவ்டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் அறிக்கை

சென்னை: இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா?… நான் கேட்பதும் காண்பதும் நிஜமா?. தினசரி இப்படத்தின் காட்சிகளும், நள்ளிரவு காட்சிகளும் தியேட்டரில் ரசிகர்கள் வருகையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2019ம் வருடம் வெளியாகிய கோமாளி திரைப்படத்தின் வாயிலாக டிரைக்டராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். இப்போது இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “லவ் டுடே” ஆகும்.

இந்த படத்தை ஜிஎஸ் என்டர்டெயின் மென்ட் நிறுவனம் தயாரித்தது. இதில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார்.

நவ..4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் “லவ் டுடே” படம் குறித்து டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அவற்றில், “இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா?… நான் கேட்பதும் காண்பதும் நிஜமா?. தினசரி இப்படத்தின் காட்சிகளும், நள்ளிரவு காட்சிகளும் தியேட்டருக்கு வரம் ரசிகர்களின் வரத்தும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.

படம் வெளியான நாளில் இருந்து பெரிய நடிகர்களின் படத்திற்கு இணையான வசூலை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.