திருமணம் முடிந்து குழந்தையும் இருக்கா... நடிகை சாந்தினி குடும்பப்படம் வைரல்

சென்னை: கோலி சோடா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சாந்தினிக்கு திருமணம் ஆகி குழந்தையும் உள்ளது. கணவர், குழந்தையுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகிறது.

விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கோலி சோடா. இப்படத்தில் கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி, சீதா, உள்ளிட்ட பல இளம் நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இதில் சாந்தினி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கோலி சோடா படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் பேர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. இதன்பின், நடிகை சாந்தினி திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு அழகிய ஆண் குழந்தையும் உண்டு. தனது கணவர் மற்றும் மகனுடன் நடிகை சாந்தினி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.