விஜய்யை வைத்து வரலாற்று படம் இயக்க இருந்தது உண்மைதான்... மனம் திறந்தார் சசிகுமார்

விஜய்யை வைத்து வரலாற்று படம் இயக்க இருந்தது உண்மைதான் என்று மனம் திறந்துள்ளார் இயக்குனரும், நடிகருமான சசிகுமார்.

சுப்ரமணியபுரம், ஈசன் படங்களை இயக்கிய இயக்குநர் சசிகுமார். இவர் நடித்த பல படங்கள் வெற்றி வாகை சூடியதும் அனைவரும் அறிந்தது ஒன்றுதான். இவர் விஜய்யுடன் இணைந்து வரலாற்றுப் படம் ஒன்றை இயக்க இருந்தது குறித்து மனம் திறந்து தெரிவித்துள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ஒரு வரலாற்றுப் படத்தை எடுக்க விரும்பினேன். இந்தக் கதையை விஜய்யிடமும் சொன்னேன். அவருக்கும் கதைப் பிடித்திருந்ததால் நடிக்கத் தயாராக இருந்தார். ஆனால் சில காரணங்களால் படத்தை எடுக்க முடியாமல் போனது. படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருந்தது. வருங்காலத்தில் விஜய்யுடன் இணைந்து நிச்சயம் ஒரு வரலாற்றுப் படத்தை இயக்குவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சசிகுமார் அடுத்ததாக முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ஏ.வி.எம். தயாரிப்பில் கே. பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் படம் - முந்தானை முடிச்சு. 1983-ல் வெளியானது. சசிகுமார் நடிக்கும் படத்துக்கு கே. பாக்யராஜ் திரைக்கதை எழுத ஜே.எஸ்.பி. சதீஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.