விஜய்க்காக களத்தில் குதிப்போம்... சீமான் சொல்கிறார்

சென்னை: களத்தில் இறங்குவோம்... வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விஜய்க்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையின் போது நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த முடிவால் பண்டிகை நாட்களில் தமிழ் திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. இது பற்றி இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறுகையில், ஆந்திராவில் வாரிசு வெளியாக விட்டால் விஜய்க்காக களத்தில் இறங்கி போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.