மை டியர் தேவசேனா இஸ் பேக் என்று எவிக்சன் ஆகி வெளியேறிய அனிதாவின் கணவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியில் 'உலக நாயகன்' கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி நடந்து வருகிறது.
இதில் முதல்நபராக ரேகா பின்னர் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர்.
பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான
சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா,
சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா
எலிமினேட் செய்யப்பட்டனர்.
2 வாரத்திற்கு முன்பு அர்ச்சனா
எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா
சம்பத் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, அனிதா சம்பத் 'பிக் பாஸ்'
வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பிறகு அவரது கணவர் பிரபாகரன் தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மை டியர் தேவசேனா இஸ் பேக் என்று
பதிவிட்டுள்ளார்.