சென்னை: மக்கள் இந்த வதந்தியை எல்லாம் நம்ப கூடாது. என்னால முடியல என வடிவேலு தெரிவித்து இருக்கிறார்.
வடிவேலுவின் கம்பேக் படமாக சமீபத்தில் ரிலீஸ் ஆனது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம். படம் ரிலீஸ் ஆன நாளிலேயே புயல் சென்னையை தாக்கியது மற்றும் இந்த படத்தை பற்றி வந்த நெகடிவ் விமர்சனங்கள் போன்ற காரணங்களால் வசூல் அதிகம் பாதிக்கப்பட்டது. படம் தோல்வியால் வடிவேலு இனிமேல் ஹீரோவாக படங்கள் நடிப்பாரா என்கிற கேள்வி ஒருபக்கம் எழுந்திருக்கிறது.
இந்நிலையில்
வடிவேலு இது பற்றி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசி
இருக்கிறார். யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
திறந்தவெளி கக்கூஸ் போல ஆகிவிட்டது. இதற்கு அரசு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
அசிங்க
அசிங்கமாக பேசுறாங்க. தயாரிப்பாளர் பாதிக்கப்படுகிறார். என படத்தையும்
அப்படி தான் சொன்னாங்க. மக்கள் இந்த வதந்தியை எல்லாம் நம்ப கூடாது. என்னால
முடியல என வடிவேலு தெரிவித்து இருக்கிறார்.