ரசிகரின் குசும்புத்தனமான கேள்விக்கு பிரகதி கூறிய அதிரடி பதில்!

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் உலகப் புகழ் பெற்ற பாடகி பிரகதி அதன் பின்னர் பாலாவின் 'பரதேசி' உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடினார். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அதில் பிகினி புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகர் அசோக் செல்வனை பிரகதி காதலித்து வருவதாக கோலிவுட் திரையுலகில் வதந்தி ஒன்று பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் கூறுகையில், நான் தற்போது கல்லூரியில் படித்து கொண்டு இருக்கிறேன். திருமணம் குறித்த எந்தவித நினைப்பும் எனக்கு இல்லை. என்னுடைய கேரியர் தான் முக்கியம். மேலும் நான் யாரையும் காதலிக்கவில்லை. இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியாவே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் பிரகதியிடம், அசோக் செல்வன் எப்படி இருக்கிறார்? என்ற கேள்வி எழுப்பியுள்ளார். அதுக்கு பதிலளித்த பிரகதி அவரைத்தான் கேட்கணும் என்று கூறியுள்ளார். நெட்டிசனின் இந்த குசும்புத்தனமான கேள்வியும் பிரகதியின் அதிரடி பதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.