32 ஆண்டுகளுக்குப் பிறகு இவருடன் இணைகிறார் ரஜினி

ரஜினி உடன் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் அமிதாப் பச்சன் ..ரஜினியின் 170-வது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இப்படத்தை லைகா தயாரிக்கிறது.

இதையடுத்து இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு கொண்டு வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.


அதேபோன்று, நடிகர்கள் ஃபஹத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைய உள்ளதாக லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது இக்கூட்டணியில் பாலிவுட் பிக் பி எனப்படும் அமிதாப் பச்சன் நடிக்கிறார் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 1991ம் ஆண்டில் வெளியான ‘ஹம்’ படத்தில் கடைசியாக ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 32 ஆண்டுகளுக்கு பின் ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கவுள்ளனர்.