மீண்டும் புதிய சிக்கலில் சிக்கியுள்ளது சிவகார்த்திகேயனின் அயலான்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து நீண்ட காலமாக வெளியாகாமல் உள்ள படம் ‘அயலான்’. இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டது. படத்தின் சிஜி வேலைகள் முடிவடையாத காரணத்தால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

அப்படி இப்படினு ஒரு வழியாக படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் படத்திற்கான ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

இப்படத்தை வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு நிலையில், பொங்கல் அன்றும் ரிலீஸில் தாமதம் ஏற்படும் என்று கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது, படத்தின் VFX காட்சிக்கு அதிகப்படியான தொகையை செலவு செய்துவிட்டதால், தற்போது ரிலீஸ்க்கு தேவையான பணம் இல்லை என கூறப்படுகிறது.

VFX காட்சிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தும், ரிலீஸுக்கு பணம் இல்லை என்ற வருத்தத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உள்ளனர். அயலானை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்தாலும், படத்துக்கு முன்னதாக படக்குழுவுக்கு பணம் கொடுக்கப்படாது. ரிலீஸுக்கு பின்னரே பங்கீடு தொகையாக கொடுக்கப்படும். இதனால், என்ன செய்வதன்றி தவிக்கிறது அயலான் படக்குழு.