அரண்மனை 4 படத்தை தொடக்கி விட்டாராம் சுந்தர்.சி

சென்னை: அரண்மனை 4 படத்தை இயக்கும் பணியை சுந்தர்.சி தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, அதைத் தொடர்ந்து அரண்மனையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்கள் வெளிவந்தன. இந்நிலையில் இப்படத்தின் நான்காம் பாகத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாரர்-காமெடி வகையிலான சுந்தர் சியின் அரண்மனை தொடருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மூன்றாம் பாகத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், சம்பத், யோகி பாபு, மனோபாலா மற்றும் மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சுந்தர்.சியின் அவ்னி மூவிஸ் சார்பில் குஷ்பு தயாரித்துள்ளார்.

அரண்மனை 3 முதல் இரண்டு பாகங்களை விட அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.