பாலா பிறந்தநாளை ஒட்டி வெளியாகும் சூர்யா படத்தின் அப்டேட்

சென்னை: பாலாவின் பிறந்த நாளை ஒட்டி சூர்யாவை வைத்து அவர் இயக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் தற்போது புதிய படம் உருவாகி வருகிறது. நந்தா, பிதாமகன் படங்களை அடுத்து சூர்யா மற்றும் பாலா கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை க்ரீத்தி ஷெட்டி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

மலையாள நடிகை மமிதா பைஜூவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் சூர்யா படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பியதாகக் கூறப்பட்டது.

ஆனால் இந்தப் படம் கைவிடப்படவில்லை என்பதை சூர்யா ஒரு புகைப்படம் மட்டும் வெளியிட்டு உறுதிப்படுத்தினார். இன்று இயக்குனர் பாலாவுக்கு பிறந்தநாள். தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனருக்கு பிறந்தநாள் என்பதால் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிறப்பு பிறந்தநாள் ஸ்பெஷல் ட்ரீட் ஆக சூர்யா 41 படத்திலிருந்து இன்று மாலை முக்கிய அப்டேட் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.