லாபம் ஸ்டார்ட் ஆகிடுச்சு... 4வது நாளிலேயே லியோ படத்தால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

சென்னை: நான்காவது நாளிலேயே லாப கணக்கை லியோ படம் தொடங்கி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் நடித்த லியோ படத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தெலுங்கில் மட்டும் மூன்று நாட்களில் 32 கோடி ரூபாயை வசூலித்து இருக்கிறது லியோ படம். இதன் மூலமாக பல பகுதிகளில் விநியோகஸ்தருக்கு போட்ட பணம் மூன்றே நாளில் திரும்பி வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Nizam மற்றும் Ceeded பகுதிகளில் நான்காவது நாளிலேயே லாப கணக்கை லியோ தொடங்கி இருக்கிறது. ஆந்திராவில் முதல் வாரத்திற்குள் படம் லாபம் ஈட்ட தொடங்கிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.