சம்பளம் இல்லை என்றாலும் ஷாருக்கிற்காக ஜவானில் நடித்திருப்பேன்: விஜய் சேதுபதி ஓப்பன் டாக்

சென்னை: ஜவான் படம் பற்றி பேசியுள்ள விஜய் சேதுபதி, 'நான் ஷாருக்கானுக்காக தான் இந்த படத்தில் நடித்தேன். சம்பளம் இல்லை என்றால் கூட நான் இதில் நடித்து இருப்பேன்' என தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஜவான் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார். அவர் இதற்கு முன்பு தமிழ்,. தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து இருந்தாலும் தற்போது ஷாருக் உடன் நடித்து இருப்பது அவருக்கு ரொம்ப ஸ்பெஷலாம்.

அட்லீ இயக்கி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க 21 கோடி ருபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார் என முன்பே செய்தி வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜவான் படம் பற்றி பேசிய விஜய் சேதுபதி, 'நான் ஷாருக் கானுக்காக தான் இந்த படத்தில் நடித்தேன். சம்பளம் இல்லை என்றால் கூட நான் இதில் நடித்து இருப்பேன்' என தெரிவித்து இருக்கிறார்.

விஜய் சேதுபதியின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து ஷாருக் வியந்து ட்விட்டரில் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.