இளம் பெண்களை கவரும் புதுவகை தங்க நகைகள்!

தங்க நகைகள் அணிவதில் அதிக ஆர்வமுடன் திகழும் தற்கால பெண்கள் அதனை தற்கால நவீன வடிவமைப்புகளிலும், தற்கால போக்குக்கு ஏற்ப தேர்வு செய்கின்றனர். முந்தைய நாட்கள் போல் கடைக்கு சென்று ஆய்வு செய்யும் பணிகள் இல்லை. நிறைய பேஷன் புத்தகங்கள், இணையதள புத்தகங்கள் போன்றவை நிகழ்கால டிரெண்ட் என்பதை ஆராய்ந்து ஆலோசனை வழங்குகின்றன.

அதனை கண்காணித்து, நமது உடல் அழகிற்கு பொலிவூட்டும் நகை எது என்பதனை ஆராய்ந்தும் நகைகளை தேர்வு செய்யலாம். தற்கால பெண்களின் நகை அணியும் முறைகள் என்பது பலபிரபலங்களின் அணிவகுப்பு, புதிய வடிவமைப்பு என்பதுடன். ஆர்வமூட்டும் அழகுடன் உள்ளதா என்பதை பொறுத்து அமைகிறது. அந்த வகையில் தற்போது உள்ள நகைகளின் டிரெண்ட் என்பது சற்று மாறுபட்டவாறு உள்ளது. பாரம்பரிய நகை வடிவமைப்புகளை தாண்டி பிரமாண்ட நகை அலங்காரம் என்றவாறு உள்ளது.

பெரிய முத்துமாலைகள், அடுக்கடுக்கான நெக்லஸ்கள், பூ வடிவமைப்பிலான பெரிய காதணிகள், ஆடைகளில் சொருகக்கூடிய பெரிய ஆபரண ஊசிகள், மணியமைப்பு காதணிகள் என்றவாறு அனைத்தும் பிரம்மாண்டமான தோற்றத்தடன் கண்கவரும் வகையில் உள்ளன. இந்த நகை அலங்கார அமைப்புதான் பிரபலங்களின் சிவப்பு கம்பள கம்பீர நடையழகை கவுரவிக்கும் விதமாக உள்ளது. இது தற்கால இளம் யுவதியர்களை கவர்ந்து வருகின்றன.

பெரிய பாந்தமான வடிவிலான ஒற்றை கல் பதித்த தொங்கலுடன் மூன்று வரிசையில் தொங்கும் மணிகளான நெக்லஸ்கள். இத்துடன் கழுத்துடன் இறுக்கி பிடிக்கும் அதே கல் அலங்கார சோக்கர் நெக்லஸ் என உச்ச பட்ச பிரமாண்ட நகை அலங்கார அணிவகுப்பு. அதுபோல் முத்துக்கள் மற்றும் தங்க மணி உருளைகள் இணைந்து பெரிய பட்டவடிவ மாலைகள் மற்றும் நெக்லஸ்கள் பெண்களின் மனதை கவர்கின்றன. மணிமாலைகள் என்பது சரசரமாய் கோர்த்து மூன்று அடுக்குகளாய் இணைக்கப்பட்டு உள்ளது. தற்போது இவை ட்ரெண்டிங்கில் உள்ளன.