திருப்பதியில் 101 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து அனைரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
கொரோனா தாக்கினால் அவ்வளவுதான் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலை கொண்டுள்ளது. சிலர் பரிசோதனை செய்து கொண்டு கொரோனா உறுதியான நிலையில் தலைமறைவான சம்பவங்களும் நடந்துள்ளது. சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளிகளும் மருத்துவமனையில் இருந்து தப்பியோடி சம்பவமும் நடந்துள்ளது. காரணம் கொரோனா பற்றிய அச்சம்தான்.
ஆனால் திருப்பதியில் மங்கம்மா என்ற மூதாட்டிக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியானது.
அதை அடுத்து திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவக்கழகத்தின் கீழ் உள்ள
ஸ்ரீபத்மாவதி மகளிர் மருத்துவமனை தனிவார்டில் சேர்க்கப்பட்ட அவருக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அவர் கொரோனாவிருந்து குணமடைந்து
விட்டார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார். கொரோனா வந்தால் உயிர் போய்
விடுமோ என்ற அச்சத்தில் உள்ள பலருக்கு மூதாட்டி மங்கம்மா குணமடைந்திருப்பது
தைரியத்தை அளித்துள்ளதாக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் வெங்கம்மா
பாராட்டு தெரிவித்தார்.