தமிழகத்தில் புதிதாக 1,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது. இன்று புதிதாக 1,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 12 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 129 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 1,103 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 90 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 048 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 1
செங்கல்பட்டு - 74
சென்னை - 292
கோவை - 95
கடலூர் - 13
தர்மபுரி - 5
திண்டுக்கல் - 17
ஈரோடு - 37
கள்ளக்குறிச்சி - 0
காஞ்சிபுரம் - 38
கன்னியாகுமரி - 14
கரூர் - 10
கிருஷ்ணகிரி - 23
மதுரை - 30
நாகை - 18
நாமக்கல் - 26
நீலகிரி - 13
பெரம்பலூர் - 0
புதுக்கோட்டை - 3
ராமநாதபுரம் - 5
ராணிப்பேட்டை - 7
சேலம் - 63
சிவகங்கை - 5
தென்காசி - 4
தஞ்சாவூர் - 32
தேனி - 12
திருப்பத்தூர் - 3
திருவள்ளூர் - 48
திருவண்ணாமலை - 10
திருவாரூர் - 13
தூத்துக்குடி - 10
திருநெல்வேலி - 14
திருப்பூர் - 28
திருச்சி - 33
வேலூர் - 14
விழுப்புரம் - 11
விருதுநகர் - 6