10 -ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்விற்குரிய மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை : தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 19ம் தேதி வெளியான நிலையில் 91.39% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும், 11-ம் வகுப்பிற்கு மாணவர்கள் செல்ல எந்த வித தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் மாதத்தில் துவங்கப்பட்டது.

அதாவது, கடந்த ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரையிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி துணைத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது.


இந்த நிலையில், துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மறு கூட்டலுக்கான முடிவுகள் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

எனவே மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் dge.tn.gov.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக புதுப்பிக்கப்பட்ட மதிப்பெண்களை சரி பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு மாணவர்களுக்கான மறு கூட்டல் மதிப்பெண்ணை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.