ஆப்கானிஸ்தானில் 11 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

11 தலிபான்கள் சுட்டுக் கொலை... ஆப்கானிஸ்தானில் நடந்த சண்டையில் 11 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புப்படை தரப்பில் கூறியிருப்பதாவது: வெள்ளிக்கிழமை இரவு வடக்கு பால்க் மாகாணத்தில் உள்ள ஹேரதன் மற்றும் சிம்டல் மாவட்டங்களில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இந்த மோதலில் தலிபான் கமாண்டர் முல்லா ஷாகூர் உட்பட 11 தலிபான்கள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுதொடர்பாக தலிபான் தரப்பில் எந்தவித விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் - அரசு படைகள் இடையே, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.