இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,539 பேருக்கு கொரோனா

இந்தியா : கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. எனவே அதன் படி அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 11,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இதை அடுத்து பாதிப்பு நேற்று 13,272 ஆக இருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இதுவரை மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 39 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அதேவேளை தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 12,783 பேர் நேற்று குணமாகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 12 ஆயிரத்து 218 ஆக அதிகரித்து.

இதை தொடர்ந்து தற்போது 99,879 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 1,287 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 43 பேர் இறந்துள்ளனர். எனவே மொத்த பலி எண்ணிகை 5,27,332 ஆக உயர்ந்துள்ளது.