சென்னையில் முகக்கவசம் அணியாதவர்கள் ...1,16,500 ரூபாய் அபராதம்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயந்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம் என்றும் மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இன்று ஒரே நாளில் மட்டும் 1,16,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மொத்தம் மண்டலம் 15-ல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மண்டலம் 1-ல் குறைந்தபட்சமாக 5 பேருக்கு ரூபாய் 2,500ம், மண்டலம் 5-ல் அதிகபட்சமாக 33 பேருக்கு ரூபாய் 16,500ம் விதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.