தமிழகத்தில் கொரோனாவுக்கு புதிதாக 1,174 பேர் பாதிப்பு... சிகிச்சையில் 9,829 பேர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 1 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 3 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் மருத்துவமனைகளில் உள்ளனர். சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 81 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது. எனினும் கொரோனா தொற்றுக்கு நேற்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-

அரியலூர் - 13
செங்கல்பட்டு - 510
சென்னை - 3,054
கோவை - 1,064
கடலூர் - 84
தர்மபுரி - 100
திண்டுக்கல் - 150
ஈரோடு - 340
கள்ளக்குறிச்சி - 16
காஞ்சிபுரம் - 230
கன்னியாகுமரி - 197
கரூர் - 105
கிருஷ்ணகிரி - 150
மதுரை - 287
நாகை - 117
நாமக்கல் - 211
நீலகிரி - 146
பெரம்பலூர் - 5
புதுக்கோட்டை - 80
ராமநாதபுரம் - 26
ராணிப்பேட்டை - 84
சேலம் - 420
சிவகங்கை - 58
தென்காசி - 37
தஞ்சாவூர் - 128
தேனி - 74
திருப்பத்தூர் - 30
திருவள்ளூர் - 457
திருவண்ணாமலை - 95
திருவாரூர் - 103
தூத்துக்குடி - 121
திருநெல்வேலி - 144
திருப்பூர் - 560
திருச்சி - 150
வேலூர் - 289
விழுப்புரம் - 88
விருதுநகர் - 92
விமானநிலைய கண்காணிப்பு - 14