தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 1 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 3 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் மருத்துவமனைகளில் உள்ளனர். சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 81 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது. எனினும் கொரோனா தொற்றுக்கு நேற்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 13 செங்கல்பட்டு - 510 சென்னை - 3,054 கோவை - 1,064 கடலூர் - 84 தர்மபுரி - 100 திண்டுக்கல் - 150 ஈரோடு - 340 கள்ளக்குறிச்சி - 16 காஞ்சிபுரம் - 230 கன்னியாகுமரி - 197 கரூர் - 105 கிருஷ்ணகிரி - 150 மதுரை - 287 நாகை - 117 நாமக்கல் - 211 நீலகிரி - 146 பெரம்பலூர் - 5 புதுக்கோட்டை - 80 ராமநாதபுரம் - 26 ராணிப்பேட்டை - 84 சேலம் - 420 சிவகங்கை - 58 தென்காசி - 37 தஞ்சாவூர் - 128 தேனி - 74 திருப்பத்தூர் - 30 திருவள்ளூர் - 457 திருவண்ணாமலை - 95 திருவாரூர் - 103 தூத்துக்குடி - 121 திருநெல்வேலி - 144 திருப்பூர் - 560 திருச்சி - 150 வேலூர் - 289 விழுப்புரம் - 88 விருதுநகர் - 92 விமானநிலைய கண்காணிப்பு - 14