தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்னையில் நேற்று மட்டும் 1,065 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா உறுதியான 1,01,951 பேரில் 12,190 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 2,157 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 87,604 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 59.37% ஆண்கள், 40.63% பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 15 மண்டலங்களில் இன்று காலை நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் விபரம்:- கோடம்பாக்கம் - 1,394 அண்ணாநகர் - 1,288 தேனாம்பேட்டை - 918 ராயபும் - 837 திரு.வி.க.நகர் - 944 தண்டையார்பேட்டை - 666 வளசரவாக்கம் - 926 திருவொற்றியூர் - 460 மணலி - 113 மாதவரம் - 638 அம்பத்தூர் - 1,338 ஆலந்தூர் - 566 அடையாறு - 1,011 பெருங்குடி - 515 சோழிங்கநல்லூர் - 459