சென்னையில் கொரோனாவுக்கு 12,735 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் குணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 57 ஆயிரத்து 490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 883 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 741 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா நோய் தொற்று அதிகளவில் பரவி உள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 97,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 82,764 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்தோரில் தற்போது 12,735 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி மண்டல வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் விபரம்:-

கோடம்பாக்கம் - 1,734
அண்ணாநகர் - 1,453
ராயபும் - 806
தேனாம்பேட்டை - 1,013
தண்டையார்பேட்டை - 602
திரு.வி.க.நகர் - 1,137
அடையாறு - 1,194
அம்பத்தூர் - 1,198
வளசரவாக்கம் - 937
திருவொற்றியூர் - 398
மாதவரம் - 578
ஆலந்தூர் - 578
பெருங்குடி - 502
மணலி - 132
சோழிங்கநல்லூர் - 399