மதுரையில் கொரோனாவில் இருந்து 13, 622 பேர் குணம்; 369 பேர் பலி

மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 090 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் நேற்று புதிதாக 63 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 48 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 57 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் நேற்று 67 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 40 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 1,060 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 46 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் மதுரையில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது.