நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோர் பத்திரமாக மீட்பு

கேனரி: கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் கடலோர காவல்படையினர் மீட்டனர்.

ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள், சிறார்கள் உட்பட 138 பேர் மூன்று ரப்பர் படகுகளில் இரவு நேரத்தில் நடுக்கடலில் சிக்கித் தவித்தனர்.

இதையறிந்த ஸ்பெயின் கடலோர காவல்படையினர், வேறொரு படகில் சென்று அனைவரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.