சிவகங்கையில் இன்று முதல் அக்.31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு 144 தடை உத்தரவு .... தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருது பாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா வரும் அக்.27 ஆம் தேதியும், தேவர் ஜெயந்தி வருகிற அக்.30 ஆம் தேதியும் நடைபெற இருக்கும் நிலையில் இன்று முதல் அக்.31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சட்டஒழுங்கை பராமரிக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி மற்றும் தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும், இன்று முதல் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், மாவட்டத்திற்குள் எந்தவித கூட்டம் நடத்தவும் அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.