தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக குறைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 1 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 80 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 52 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 471 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 57 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தொற்று தாக்குதலுக்கு நேற்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 2 செங்கல்பட்டு - 80 சென்னை - 398 கோவை - 148 கடலூர் - 26 தர்மபுரி - 10 திண்டுக்கல் - 26 ஈரோடு - 70 கள்ளக்குறிச்சி - 7 காஞ்சிபுரம் - 58 கன்னியாகுமரி - 16 கரூர் - 15 கிருஷ்ணகிரி - 6 மதுரை - 27 நாகை - 24 நாமக்கல் - 28 நீலகிரி - 37 பெரம்பலூர் - 0 புதுக்கோட்டை - 16 ராமநாதபுரம் - 4 ராணிப்பேட்டை - 11 சேலம் - 78 சிவகங்கை - 12 தென்காசி - 14 தஞ்சாவூர் - 32 தேனி - 4 திருப்பத்தூர் - 12 திருவள்ளூர் - 88 திருவண்ணாமலை - 9 திருவாரூர் - 10 தூத்துக்குடி - 15 திருநெல்வேலி - 8 திருப்பூர் - 79 திருச்சி - 21 வேலூர் - 40 விழுப்புரம் - 19 விருதுநகர் - 9