சென்னையில் கொரோனாவுக்கு 15,127 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 87,235 ஆக உள்ளது. 15,127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,456 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,977 பேர்
அண்ணா நகர் - 1,629 பேர்
தேனாம்பேட்டை - 1,250 பேர்
தண்டையார்பேட்டை - 808 பேர்
ராயபுரம் - 1,002 பேர்
அடையாறு - 1,167 பேர்
திரு.வி.க. நகர் - 1,114 பேர்
வளசரவாக்கம் - 725 பேர்
அம்பத்தூர் - 909 பேர்
திருவொற்றியூர் - 482 பேர்
மாதவரம் - 385 பேர்
ஆலந்தூர் - 571 பேர்
பெருங்குடி - 394 பேர்
சோழிங்கநல்லூர் - 408 பேர்
மணலி - 230 பேர்