தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. நேற்று புதிதாக 1,721 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 59 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 32 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், நோய் தொற்றுக்கு நேற்று மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 53 செங்கல்பட்டு - 912 சென்னை - 4,978 கோவை - 883 கடலூர் - 216 தர்மபுரி - 175 திண்டுக்கல் - 135 ஈரோடு - 580 கள்ளக்குறிச்சி - 102 காஞ்சிபுரம் - 483 கன்னியாகுமரி - 210 கரூர் - 297 கிருஷ்ணகிரி - 324 மதுரை - 346 நாகை - 299 நாமக்கல் - 419 நீலகிரி - 195 பெரம்பலூர் - 33 புதுக்கோட்டை - 171 ராமநாதபுரம் - 49 ராணிப்பேட்டை - 164 சேலம் - 781 சிவகங்கை - 133 தென்காசி - 73 தஞ்சாவூர் - 255 தேனி - 69 திருப்பத்தூர் - 111 திருவள்ளூர் - 753 திருவண்ணாமலை - 336 திருவாரூர் - 198 தூத்துக்குடி - 231 திருநெல்வேலி - 260 திருப்பூர் - 720 திருச்சி - 275 வேலூர் - 236 விழுப்புரம் - 216 விருதுநகர் - 88 விமானநிலைய கண்காணிப்பு - 6